தமிழ்
Surah Al-'alaq ( The Clot ) - Aya count 19
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ 
( 1 ) 
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ 
( 2 ) 
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ 
( 3 ) 
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ 
( 4 ) 
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ 
( 5 ) 
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ 
( 6 ) 
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
أَن رَّآهُ اسْتَغْنَىٰ 
( 7 ) 
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ 
( 8 ) 
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ 
( 9 ) 
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
عَبْدًا إِذَا صَلَّىٰ 
( 10 ) 
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ 
( 11 ) 
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ 
( 12 ) 
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ 
( 13 ) 
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ 
( 14 ) 
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ 
( 15 ) 
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ 
( 16 ) 
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
فَلْيَدْعُ نَادِيَهُ 
( 17 ) 
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
سَنَدْعُ الزَّبَانِيَةَ 
( 18 ) 
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩ 
( 19 ) 
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.