தமிழ்
Surah Abasa ( He frowned ) - Aya count 42
عَبَسَ وَتَوَلَّىٰ
( 1 ) 
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
أَن جَاءَهُ الْأَعْمَىٰ
( 2 ) 
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ
( 3 ) 
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ
( 4 ) 
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ
( 5 ) 
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
فَأَنتَ لَهُ تَصَدَّىٰ
( 6 ) 
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
( 7 ) 
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ
( 8 ) 
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
وَهُوَ يَخْشَىٰ
( 9 ) 
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
( 10 ) 
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
( 11 ) 
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
فَمَن شَاءَ ذَكَرَهُ
( 12 ) 
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
( 13 ) 
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ
( 14 ) 
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
بِأَيْدِي سَفَرَةٍ
( 15 ) 
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
كِرَامٍ بَرَرَةٍ
( 16 ) 
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
( 17 ) 
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
( 18 ) 
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
( 19 ) 
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ
( 20 ) 
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
( 21 ) 
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ
( 22 ) 
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ
( 23 ) 
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ
( 24 ) 
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا
( 25 ) 
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
( 26 ) 
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
فَأَنبَتْنَا فِيهَا حَبًّا
( 27 ) 
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
وَعِنَبًا وَقَضْبًا
( 28 ) 
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
وَزَيْتُونًا وَنَخْلًا
( 29 ) 
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
وَحَدَائِقَ غُلْبًا
( 30 ) 
அடர்ந்த தோட்டங்களையும்,
وَفَاكِهَةً وَأَبًّا
( 31 ) 
பழங்களையும், தீவனங்களையும்-
مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
( 32 ) 
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
( 33 ) 
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
( 34 ) 
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
وَأُمِّهِ وَأَبِيهِ
( 35 ) 
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
( 36 ) 
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
( 37 ) 
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
( 38 ) 
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
( 39 ) 
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
( 40 ) 
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
تَرْهَقُهَا قَتَرَةٌ
( 41 ) 
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
( 42 ) 
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.