தமிழ்
Surah Al-Ghashiya ( The Overwhelming ) - Aya count 26
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ 
( 1 ) 
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ 
( 2 ) 
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
عَامِلَةٌ نَّاصِبَةٌ 
( 3 ) 
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
تَصْلَىٰ نَارًا حَامِيَةً 
( 4 ) 
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ 
( 5 ) 
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ 
( 6 ) 
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ 
( 7 ) 
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ 
( 8 ) 
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
لِّسَعْيِهَا رَاضِيَةٌ 
( 9 ) 
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
فِي جَنَّةٍ عَالِيَةٍ 
( 10 ) 
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً 
( 11 ) 
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ 
( 12 ) 
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ 
( 13 ) 
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ 
( 14 ) 
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ 
( 15 ) 
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ 
( 16 ) 
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ 
( 17 ) 
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ 
( 18 ) 
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ 
( 19 ) 
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ 
( 20 ) 
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ 
( 21 ) 
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ 
( 22 ) 
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ 
( 23 ) 
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ 
( 24 ) 
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ 
( 25 ) 
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم 
( 26 ) 
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.