தமிழ்
Surah Al-'adiyat ( Those That Run ) - Aya count 11
وَالْعَادِيَاتِ ضَبْحًا
( 1 ) 
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
فَالْمُورِيَاتِ قَدْحًا
( 2 ) 
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
فَالْمُغِيرَاتِ صُبْحًا
( 3 ) 
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
فَأَثَرْنَ بِهِ نَقْعًا
( 4 ) 
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
فَوَسَطْنَ بِهِ جَمْعًا
( 5 ) 
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
( 6 ) 
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
( 7 ) 
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
( 8 ) 
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
( 9 ) 
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
( 10 ) 
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
( 11 ) 
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.